Tuesday, August 17, 2010

உனக்காக / எனக்காக

- உன்னை பார்த்த நாள் முதல், என்னை நான் மறக்கவில்லை, இந்த உலகத்தையும் மறக்கவில்லை, உன்னில் என்னை கலக்கவும் இல்லை, அன்று முதல் தான், என் தாய் மொழியில் எழுதினால் கூட,கவிதை என்று உணர்ந்தேன்.
- எல்லோரும் இதழ்களால் புன்னகைப்பர், நீ மட்டும் உன் கண்களால் புன்னகைக்கிறாய்…
- அவளை எனக்கு பிடித்ததால் அவளுடைய ஓட்டை வண்டியையும் எனக்கு பிடித்தது..
- நீ வரும் பாதையை பார்த்துகொண்டு நிற்கின்றேன், நீ கடந்து போனது தெரியாமல்…
- நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும், என்னுள் ஆழமாய் இறங்குகிறாய் என்னை அறியாமலே..
- உன்னை பார்ப்பதை தவிர்த்தேன் ஏன் என்று தெரியாமல், பிறகு தான் உணர்ந்தேன் எனக்கு கண்ணாடியில் என்னை பார்ப்பது பிடிக்காது என்று, உன்னை பார்ப்பதை விட பார்க்காமல் இருக்கும் போதுதான் என் மனம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்..

Wednesday, July 21, 2010

கண் தானம்

நான் பிறக்கும் பொழுது என்னுடன் தோன்றினாய்.. இந்த உலகத்தை பார்க்க எனக்கு நீ உதவினாய்... நல்லவற்றை மட்டும் இன்றி கெட்ட விஷயங்களையும் பிரித்து பார்க்க முடிந்தது உன்னால் தான்.. என் சோகத்தையும் சந்தோஷத்தையும் நீ உன் உணர்ச்சிகளால் உலகிற்கு காட்டினாய்... நீ இல்லாமல் உலகில் எத்தனையோ பேர் வாடுகின்றனர்.. என்னுடன் நீயும் மண்ணிற்கு அல்லது தீயில் கருகுவாய்.. என்னால் உன்னை நான் இறந்த பிறகும் வாழ வைக்க முடியும்.. ஆம் நான் உன்னை மற்றவர்க்கு தானமாய் தருவேன்... எனக்கு நீ ஒளியை காட்டியது போல் மற்றவர்க்கும் நீ ஒளியை தா..
ஆம் நீதான் என் கண்கள்!!!
தானங்களில் சிறந்த தானம் கண் தானம்... ஒரு கணம் சிந்திப்போம் நம் உயரிய கண்களை மற்றவர்களுக்கு கொடுத்து, இறக்கும் பொழுது மற்றவர்களுக்கு இந்த உலகத்தினை காண உதவுவோம்...

Thursday, July 8, 2010

சமுகம்

தெரு கோடியில் நம் ஏழை தமிழன் உணவின்றி வாடுகிறான்.. கோடான கோடி செலவில் நாம் தமிழை வாழ வைக்க விழா எடுக்கிறோம்.. ஏற்றதாழ்வுகள் இல்லாத சமுகம் வேண்டும் என்பார், ஏற்றங்கலே இல்லாத சமூகமும் இங்கு உள்ளது.. ஒருவனுக்கு தேவைக்கு அதிகமாய் பணம் இருக்கும், இன்னொருவனுக்கு தேவைக்கே பணம் இருக்காது.. கிராமங்களின் எல்லையில் கருப்பண்ணசாமி சிலை இருக்கும், அது தப்பு செய்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும், ஆனால் நகரத்தில் தப்புகள் அதிகமாய் நடப்பதால்தான் அந்த கருப்பண்ணசாமியே இங்கு வர விரும்பவில்லையோ...
காக்கி சட்டை போடுபவனை காவல்காரன் என்போம், கதர் சட்டை போடுபவனை காந்தியவாதி என்போம், காவி உடை போடுபவனை சாமியார் என்போம், சிகப்பு நிற சட்டை போடுபவனை புரட்சியாளன் என்போம், கருப்பு உடை அணிபவனை நாத்திகன் என்போம்.. நாம் போடும் சட்டையை வைத்து இத்தனை வேற்றுமைகளை மனிதனால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும்.. சகமனிதனை மதிக்க கற்றவன் தான் உண்மையில் மனிதன்.. இனி தமிழராய் மட்டும் அறியப்படாமல், இந்தியனாய் அறியப்படு.. எல்லையில் நமக்காக ஆயிரம் இதயம்கள் துடிக்கின்றன.. நாம் இங்கு தொலைகாட்சி பெட்டியை இனாமாய் வாங்கி வோட்டு போடுகிறோம்.. மனிதன் வாழ நிலம் வாங்குவான், ஆனால் இன்று நகரத்தில் மனிதனை புதைக்க கூட நிலம் வாங்க முடியாது.. பணத்தால் மனிதனும், மனிதநேயமும் அழிந்துவிட கூடாது ...

Sunday, July 4, 2010

காதல்

ஒரு பார்வையில் காதல் வரலாம்.. ஒரு வார்த்தையில் காதல் வரலாம்.. ஒரு நிமிடத்தில் காதல் வரலாம்.. ஆனால் காதல் வந்துவிட்டால் காலமே உன்னை சுற்றி வரும்.. ஊரில் உள்ளவனோ அல்லது உன் தங்கையோ உன்னை டா போட்டு பேசினால் அடிப்பாய்.. ஆனால் உன் காதலி டா போடாமல் பேசினால் நெருக்கம் இருக்காது என்பாய்.. அவள் உன்னிடம் பேசிய ஒரு வார்த்தையை நாள் முழுவதும் யோசிப்பாய்.. நிமிடங்களில் வருஷங்கள் வாழ்வாய்..அவள் பெயரை சொன்னால் கூட கவிதையாய் இனிக்கும்..
எல்லோரிடமும் கண்கள் பார்த்து பேசிய எனக்கு உன் கண்கள் பார்த்து காதல் சொல்ல முடியவில்லை.. நீ குழந்தைதனமாய் செய்யும் குறும்புகளில் முழ்கி போகிறேன்.. ஒரு முறை நீ இதுவரை யாரையாவது காதலித்து இருக்கிறாயா என்றாய், உன்னை தான் என்று சொல்ல நா தழுவுது.. மரணத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பதை உன்னை காதலிக்க் ஆரம்பித்த பிறகு தான் உணர்ந்தேன், ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் கண்களாலும், வார்த்தைக்களாலும் என்னை கொல்கிறாய்....
நான் எந்த ஒரு விஷயத்திற்கும் ஆஞ்சாதவன் என்பார்கள், அனால் நான் அஞ்சும் ஒரு விஷயம் நீ என்னை காதலிப்பாயா இல்லையா என்பது தான்.. நீ நட்பாய் பழகுகிறாயா இல்லை காதலுடன் பழகுகிறாயா? புதிருக்கு சீக்கிரமே பதில் தெரியவேண்டும்.. சில நேரம் நானா இப்படி என்று கேட்க தோன்றும்.. உண்மைதான் காதல் நிஜமாகவே ஒரு மனிதனை இறக்கை இல்லாமல் பறக்க செய்யும்...

Monday, June 28, 2010

கல்லூரி நண்பர்கள்

முதல் நாள் கல்லூரியில் நுழையும் போது எல்லோரும் அந்நியமாய் தெரிந்தனர்.. இறுதி நாள் கல்லூரி முடியும் போது நான் எல்லோரும் இல்லாமல் அந்நியமாய் உணர்தேன்.. வாழ்கையில் வசந்தகாலம் மரங்களுக்கு வருடம்தோறும் வரும், ஆனால் மனிதர்களுக்கு வசந்தகால கல்லூரி வாழ்க்கை ஒரு முறை தான் வரும்...
முதல் நாள் பார்க்கும் போது புன்னகைத்தோம், அன்னியர்கள் போல் இல்லாமல் நண்பர்கள் ஆனோம், எந்த ஒரு தப்பானாலும் சேர்ந்தே செய்தோம், தப்புகள் இல்லா வாழ்க்கை தரமற்றது என்றோம்.. சிறு சிறு சண்டைகள் போட்டோம்..
சில நேரம் அருகே இருந்த நண்பன் காதலுக்காய் ஏங்குவதை பார்த்தோம், அவனுடைய காதலுக்கு உதவி,அந்த பெண் என்னை அண்ணன் என்பால், நாம் திரும்பி பார்க்கையில் என் நண்பன் என் மச்சான் ஆகி என்னை விட்டு வெகுதூரம் போய் விடுவான்..
காதல் இல்லாமல் கூட ஒருவன் கல்லூரியில் இருந்து வெளியேறுவான்.. அனால் நட்பு இல்லாமல் வெளிவரமுடியாது..
பள்ளிகூட நட்பு பசுமையானது.. கல்லூரி நட்பு பசுமரத்தாணி போன்றது, என்றும் மறவாது.. கல்லூரி இறுதி நாள் மிகவும் கொடுமை ஆனது.. வாழ்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் இனி வாழமுடியாது, காட்டினுள் சுதந்திரமாய் திரிந்த சிங்கத்தை நகரத்து சிறைக்குள் அடைத்து வைத்து இனி மற்றவர்களுக்காக வாழ பழக வேண்டும்...
நண்பா ஒரு பேருந்தை பிடித்து காலையில் வந்து உன்னை சந்திக்க மனம் ஏங்குகிறது.. இத்தனை நாள் ஒன்றாய் இருந்தோம் இனி உன்னை சந்திக்க கூட ஒரு காரணம் வேண்டும்.. வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்புகையில் நமது பழைய புகைப்படத்தை எடுத்து பார்க்கையில் விழி ஒரம் சிறு கண்ணீர் துளி வருகிறது.. நண்பா

Friday, June 25, 2010

உணர்வுகள்

1.அதிகாலை நேரத்தில் மழை பெய்த சாலையோரம் நடக்கும் பொழுது செடிகளின் மீதுள்ள பனி துளி நம் மீது பட்டால் மனதிற்குள் வரும் உணர்வு போல?
2.அக்னிநட்சித்திர வெயில் நேரத்தில் நம் மீது எங்கிருந்தோ தென்றல் தழுவி செல்லும் பொழுது வரும் உணர்வு போல?
3.நாம் சாலையை கடக்கும் பொழுது எதிரே ஆம்புலன்ஸ் சென்றால் ஒரு நிமிடம் நின்று அதில் உள்ளவர்கள் நன்றாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைக்கும் பொழுது வரும் உணர்வு போல?
முதல் மூன்று வரிகளை படித்து விட்டு நான் காதலை பற்றி சொல்வேன் என்று எதிர்பார்க்கும் உணர்வு போல?
என்னதான் வேறு ஊருக்கு சென்று பிழைக்க போனாலும் சொந்த ஊருக்கு திரும்பும் பொழுதும்.. நாம் நீண்ட நாட்களாக பார்க்காத பள்ளி தோழனை பார்க்கும் பொழுதும் வரும் உணர்வு சொல்லில் அடங்காது..

Thursday, June 24, 2010

நட்பு

நட்பு என்பது மேகத்தை போல கலைந்து செல்லலாம்.. ஆனால் என்றும் மறைந்து போகாது.. நாம் என்றாவது ஒரு நாள் மீண்டும் ஒன்று சேர்வோம் அப்பொழுது மேகங்கள் கூடி நட்பு மழை பொழியும்...