Sunday, July 4, 2010

காதல்

ஒரு பார்வையில் காதல் வரலாம்.. ஒரு வார்த்தையில் காதல் வரலாம்.. ஒரு நிமிடத்தில் காதல் வரலாம்.. ஆனால் காதல் வந்துவிட்டால் காலமே உன்னை சுற்றி வரும்.. ஊரில் உள்ளவனோ அல்லது உன் தங்கையோ உன்னை டா போட்டு பேசினால் அடிப்பாய்.. ஆனால் உன் காதலி டா போடாமல் பேசினால் நெருக்கம் இருக்காது என்பாய்.. அவள் உன்னிடம் பேசிய ஒரு வார்த்தையை நாள் முழுவதும் யோசிப்பாய்.. நிமிடங்களில் வருஷங்கள் வாழ்வாய்..அவள் பெயரை சொன்னால் கூட கவிதையாய் இனிக்கும்..
எல்லோரிடமும் கண்கள் பார்த்து பேசிய எனக்கு உன் கண்கள் பார்த்து காதல் சொல்ல முடியவில்லை.. நீ குழந்தைதனமாய் செய்யும் குறும்புகளில் முழ்கி போகிறேன்.. ஒரு முறை நீ இதுவரை யாரையாவது காதலித்து இருக்கிறாயா என்றாய், உன்னை தான் என்று சொல்ல நா தழுவுது.. மரணத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பதை உன்னை காதலிக்க் ஆரம்பித்த பிறகு தான் உணர்ந்தேன், ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் கண்களாலும், வார்த்தைக்களாலும் என்னை கொல்கிறாய்....
நான் எந்த ஒரு விஷயத்திற்கும் ஆஞ்சாதவன் என்பார்கள், அனால் நான் அஞ்சும் ஒரு விஷயம் நீ என்னை காதலிப்பாயா இல்லையா என்பது தான்.. நீ நட்பாய் பழகுகிறாயா இல்லை காதலுடன் பழகுகிறாயா? புதிருக்கு சீக்கிரமே பதில் தெரியவேண்டும்.. சில நேரம் நானா இப்படி என்று கேட்க தோன்றும்.. உண்மைதான் காதல் நிஜமாகவே ஒரு மனிதனை இறக்கை இல்லாமல் பறக்க செய்யும்...

No comments:

Post a Comment