Monday, June 28, 2010

கல்லூரி நண்பர்கள்

முதல் நாள் கல்லூரியில் நுழையும் போது எல்லோரும் அந்நியமாய் தெரிந்தனர்.. இறுதி நாள் கல்லூரி முடியும் போது நான் எல்லோரும் இல்லாமல் அந்நியமாய் உணர்தேன்.. வாழ்கையில் வசந்தகாலம் மரங்களுக்கு வருடம்தோறும் வரும், ஆனால் மனிதர்களுக்கு வசந்தகால கல்லூரி வாழ்க்கை ஒரு முறை தான் வரும்...
முதல் நாள் பார்க்கும் போது புன்னகைத்தோம், அன்னியர்கள் போல் இல்லாமல் நண்பர்கள் ஆனோம், எந்த ஒரு தப்பானாலும் சேர்ந்தே செய்தோம், தப்புகள் இல்லா வாழ்க்கை தரமற்றது என்றோம்.. சிறு சிறு சண்டைகள் போட்டோம்..
சில நேரம் அருகே இருந்த நண்பன் காதலுக்காய் ஏங்குவதை பார்த்தோம், அவனுடைய காதலுக்கு உதவி,அந்த பெண் என்னை அண்ணன் என்பால், நாம் திரும்பி பார்க்கையில் என் நண்பன் என் மச்சான் ஆகி என்னை விட்டு வெகுதூரம் போய் விடுவான்..
காதல் இல்லாமல் கூட ஒருவன் கல்லூரியில் இருந்து வெளியேறுவான்.. அனால் நட்பு இல்லாமல் வெளிவரமுடியாது..
பள்ளிகூட நட்பு பசுமையானது.. கல்லூரி நட்பு பசுமரத்தாணி போன்றது, என்றும் மறவாது.. கல்லூரி இறுதி நாள் மிகவும் கொடுமை ஆனது.. வாழ்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் இனி வாழமுடியாது, காட்டினுள் சுதந்திரமாய் திரிந்த சிங்கத்தை நகரத்து சிறைக்குள் அடைத்து வைத்து இனி மற்றவர்களுக்காக வாழ பழக வேண்டும்...
நண்பா ஒரு பேருந்தை பிடித்து காலையில் வந்து உன்னை சந்திக்க மனம் ஏங்குகிறது.. இத்தனை நாள் ஒன்றாய் இருந்தோம் இனி உன்னை சந்திக்க கூட ஒரு காரணம் வேண்டும்.. வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்புகையில் நமது பழைய புகைப்படத்தை எடுத்து பார்க்கையில் விழி ஒரம் சிறு கண்ணீர் துளி வருகிறது.. நண்பா

No comments:

Post a Comment