Sunday, October 3, 2010

உணர்வுகள் - II

இரவில் நிலவை மட்டும் பார்த்து நடக்கும் போது.. அது நம்மை பின்தொடர்ந்து வருவதாய் தோன்றும்… அது போலத்தான் எவ்வளவு கூட்டத்தில் நின்றாலும், நீ என்னை மட்டும் பார்ப்பதாய் தோன்றும்…
கனவுகளில் கூட உன்னை தேடி அலைகிறேன்… எனக்காக பிறந்தவள் நீ என்று நினைத்தேன், ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் என்று உணர்த்திவிட்டாய்…
தனிமையை விரும்பிய நாட்கள் அதிகமாகின, உன் நினைவுகளில் என்னை மறப்பதற்கு...

Wednesday, September 15, 2010

Lot of Jumbles

World is a like a mirror, when u look at it with happiness, u can feel fresh air full of joy. When u look at it with sorrow, u may feel that u don't have air to breathe..
Glasses that we wear for avoiding sunlight, also helps us sometime in hiding our tears..
Never Had _______ & Never will have ______...

Sunday, September 12, 2010

Bike Ride on Hill

Life is like riding bike on hills, when u r going up the slope, u have to accelerate full cylinders, similarly in life when things r going right utilize it, dont sit & let things happen on it's own... And While coming down the hill, remember to hit the brake & slow down, no reason to accelerate wasting ur energy, cause when slope takes u down go along with it, stay in neutral, but dont switch off. In life there will be times where u will be going down with emotions, remember to slow down ur feelings & wait to change the gears...

Tuesday, August 17, 2010

உனக்காக / எனக்காக

- உன்னை பார்த்த நாள் முதல், என்னை நான் மறக்கவில்லை, இந்த உலகத்தையும் மறக்கவில்லை, உன்னில் என்னை கலக்கவும் இல்லை, அன்று முதல் தான், என் தாய் மொழியில் எழுதினால் கூட,கவிதை என்று உணர்ந்தேன்.
- எல்லோரும் இதழ்களால் புன்னகைப்பர், நீ மட்டும் உன் கண்களால் புன்னகைக்கிறாய்…
- அவளை எனக்கு பிடித்ததால் அவளுடைய ஓட்டை வண்டியையும் எனக்கு பிடித்தது..
- நீ வரும் பாதையை பார்த்துகொண்டு நிற்கின்றேன், நீ கடந்து போனது தெரியாமல்…
- நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும், என்னுள் ஆழமாய் இறங்குகிறாய் என்னை அறியாமலே..
- உன்னை பார்ப்பதை தவிர்த்தேன் ஏன் என்று தெரியாமல், பிறகு தான் உணர்ந்தேன் எனக்கு கண்ணாடியில் என்னை பார்ப்பது பிடிக்காது என்று, உன்னை பார்ப்பதை விட பார்க்காமல் இருக்கும் போதுதான் என் மனம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்..

Wednesday, July 21, 2010

கண் தானம்

நான் பிறக்கும் பொழுது என்னுடன் தோன்றினாய்.. இந்த உலகத்தை பார்க்க எனக்கு நீ உதவினாய்... நல்லவற்றை மட்டும் இன்றி கெட்ட விஷயங்களையும் பிரித்து பார்க்க முடிந்தது உன்னால் தான்.. என் சோகத்தையும் சந்தோஷத்தையும் நீ உன் உணர்ச்சிகளால் உலகிற்கு காட்டினாய்... நீ இல்லாமல் உலகில் எத்தனையோ பேர் வாடுகின்றனர்.. என்னுடன் நீயும் மண்ணிற்கு அல்லது தீயில் கருகுவாய்.. என்னால் உன்னை நான் இறந்த பிறகும் வாழ வைக்க முடியும்.. ஆம் நான் உன்னை மற்றவர்க்கு தானமாய் தருவேன்... எனக்கு நீ ஒளியை காட்டியது போல் மற்றவர்க்கும் நீ ஒளியை தா..
ஆம் நீதான் என் கண்கள்!!!
தானங்களில் சிறந்த தானம் கண் தானம்... ஒரு கணம் சிந்திப்போம் நம் உயரிய கண்களை மற்றவர்களுக்கு கொடுத்து, இறக்கும் பொழுது மற்றவர்களுக்கு இந்த உலகத்தினை காண உதவுவோம்...

Thursday, July 8, 2010

சமுகம்

தெரு கோடியில் நம் ஏழை தமிழன் உணவின்றி வாடுகிறான்.. கோடான கோடி செலவில் நாம் தமிழை வாழ வைக்க விழா எடுக்கிறோம்.. ஏற்றதாழ்வுகள் இல்லாத சமுகம் வேண்டும் என்பார், ஏற்றங்கலே இல்லாத சமூகமும் இங்கு உள்ளது.. ஒருவனுக்கு தேவைக்கு அதிகமாய் பணம் இருக்கும், இன்னொருவனுக்கு தேவைக்கே பணம் இருக்காது.. கிராமங்களின் எல்லையில் கருப்பண்ணசாமி சிலை இருக்கும், அது தப்பு செய்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும், ஆனால் நகரத்தில் தப்புகள் அதிகமாய் நடப்பதால்தான் அந்த கருப்பண்ணசாமியே இங்கு வர விரும்பவில்லையோ...
காக்கி சட்டை போடுபவனை காவல்காரன் என்போம், கதர் சட்டை போடுபவனை காந்தியவாதி என்போம், காவி உடை போடுபவனை சாமியார் என்போம், சிகப்பு நிற சட்டை போடுபவனை புரட்சியாளன் என்போம், கருப்பு உடை அணிபவனை நாத்திகன் என்போம்.. நாம் போடும் சட்டையை வைத்து இத்தனை வேற்றுமைகளை மனிதனால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும்.. சகமனிதனை மதிக்க கற்றவன் தான் உண்மையில் மனிதன்.. இனி தமிழராய் மட்டும் அறியப்படாமல், இந்தியனாய் அறியப்படு.. எல்லையில் நமக்காக ஆயிரம் இதயம்கள் துடிக்கின்றன.. நாம் இங்கு தொலைகாட்சி பெட்டியை இனாமாய் வாங்கி வோட்டு போடுகிறோம்.. மனிதன் வாழ நிலம் வாங்குவான், ஆனால் இன்று நகரத்தில் மனிதனை புதைக்க கூட நிலம் வாங்க முடியாது.. பணத்தால் மனிதனும், மனிதநேயமும் அழிந்துவிட கூடாது ...

Sunday, July 4, 2010

காதல்

ஒரு பார்வையில் காதல் வரலாம்.. ஒரு வார்த்தையில் காதல் வரலாம்.. ஒரு நிமிடத்தில் காதல் வரலாம்.. ஆனால் காதல் வந்துவிட்டால் காலமே உன்னை சுற்றி வரும்.. ஊரில் உள்ளவனோ அல்லது உன் தங்கையோ உன்னை டா போட்டு பேசினால் அடிப்பாய்.. ஆனால் உன் காதலி டா போடாமல் பேசினால் நெருக்கம் இருக்காது என்பாய்.. அவள் உன்னிடம் பேசிய ஒரு வார்த்தையை நாள் முழுவதும் யோசிப்பாய்.. நிமிடங்களில் வருஷங்கள் வாழ்வாய்..அவள் பெயரை சொன்னால் கூட கவிதையாய் இனிக்கும்..
எல்லோரிடமும் கண்கள் பார்த்து பேசிய எனக்கு உன் கண்கள் பார்த்து காதல் சொல்ல முடியவில்லை.. நீ குழந்தைதனமாய் செய்யும் குறும்புகளில் முழ்கி போகிறேன்.. ஒரு முறை நீ இதுவரை யாரையாவது காதலித்து இருக்கிறாயா என்றாய், உன்னை தான் என்று சொல்ல நா தழுவுது.. மரணத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பதை உன்னை காதலிக்க் ஆரம்பித்த பிறகு தான் உணர்ந்தேன், ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் கண்களாலும், வார்த்தைக்களாலும் என்னை கொல்கிறாய்....
நான் எந்த ஒரு விஷயத்திற்கும் ஆஞ்சாதவன் என்பார்கள், அனால் நான் அஞ்சும் ஒரு விஷயம் நீ என்னை காதலிப்பாயா இல்லையா என்பது தான்.. நீ நட்பாய் பழகுகிறாயா இல்லை காதலுடன் பழகுகிறாயா? புதிருக்கு சீக்கிரமே பதில் தெரியவேண்டும்.. சில நேரம் நானா இப்படி என்று கேட்க தோன்றும்.. உண்மைதான் காதல் நிஜமாகவே ஒரு மனிதனை இறக்கை இல்லாமல் பறக்க செய்யும்...